காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இயக்குனர்கள் செல்வராகவன், கவுதம் மேனன். இருவரது படங்களும் அந்தக் காலத்தில் ஒரு டிரென்ட் செட் செய்த படங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால், சமீப காலங்களில் அவர்களது இயக்கத்தில் வந்த படங்கள் சொல்லிக் கொள்ளும்ப்டி அமையவில்லை. அதே சமயம் அவர்கள் இருவருமே நடிகர்களாக பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
இருந்தாலும், சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன் இருவரும் நடிப்பது ரசிகர்களிடம் நேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் மேனன் இன்னுமா கடனாளியாக இருக்கிறார், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்கிறார் போலிருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
செல்வராகன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க 'மன்னவன் வந்தானடி' என்ற படம் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமாகி அப்படியே நின்றுவிட்டது. இருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் உள்ளதால் சந்தானம் படத்தில் செல்வராகவன் நடிப்பது ஆச்சரியமாகப்படவில்லை. நடிகர்கள் என மாறிவிட்ட பிறகு யார் படத்தில் நடித்தால் என்ன, சம்பளம் கரெக்டாக வந்தால் சரி.