காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது 15 ஆண்டு காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பிறகும் தான் நடித்த படங்களின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், கணவருடன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பினார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அதோடு நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது. என்றாலும் அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.