மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.