ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு உடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் ரஹ்மான் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார். ஏ.ஆர். ரஹ்மான், ‛‛தனது பேட்டிகளை மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்'' என கூறினார்.
அவரை தொடர்ந்து சாய்ரா பானு மேடையில் ஹிந்தியில் பேச தொடங்கினார். அப்போது மனைவியிடம், ஹிந்திக்கு பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். இதை கேட்ட அங்கிருந்த ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்தது. அதற்கு அவரது மனைவி, மன்னிக்கவும், எனக்கு தமிழில் வேகமாக பேச வராது. அதனால் தான் ஹிந்தியில் பேசினேன். மன்னித்து விடுங்கள்'' என்று கூறினார்.