மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் தங்கி உள்ளார் ரஜினிகாந்த். அங்கு அவரை கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர் உடன் நேரில் சென்று சந்தித்திருக்கிறார் இயக்குனர் சுதா. அப்போது கேஜிஎப் பட நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கு அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக லால் சலாம் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, அதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.