சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சி.ஜ.ஜ தக்ஷின் தென்னிந்திய ஊடக விழாவில் தனுஷ் பங்கேற்றார். அந்த விழாவில் தனுஷ்க்கு யூத் ஜகான் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனுஷ் பேசியது ; நான் 40 வயதில் யூத் ஜகான் விருது பெறுகிறேன். வெல்லவும், சாதிக்கவும் இன்னும் நிறைய உள்ளது. எனக்கு ஒரு லட்சிய கனவு உள்ளது. அந்த கனவின் காரணமாக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு 30 வயது ஆகும் போது 50 வயதில் உள்ளவர்கள் என்னை பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது . 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு தனுஷ் சிரித்து கொண்டே கூறினார்.