கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது பெயரில் 'சினேகன்' என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி 'சினேகம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இரண்டுக்-கும் உள்ள பெயர் பொருத்தத்தை வைத்து நடிகை ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “நன்கொடை பெற்று மோசடி செய்ததாக எந்தப் புகாரும் இல்லை. தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. ஆதாரமே இல்லாமல் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்: என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஜெயலட்சுமி மீதான பண மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஜெயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.