'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
வீரன் பெரியவரா, மன்னன் பெரியவரா என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். அப்படி ஒரு நிலை ஒரு 'மாவீரனுக்கு' ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் 'மாமன்னன்'.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை மே மாதக் கடைசியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகளில் தாமதமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மே மாதத்தில் படத்தை வெளியிட வாய்ப்பில்லை என இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டாராம். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் படத்தை ஜுன் மாதக் கடைசிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம்.
'மாமன்னன்' வெளியீடு ஜுன் மாதம் தள்ளிப் போனதால், அப்போது வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'மாவீரன்' படத்தை ஜுலை கடைசிக்கு மாற்றியிருக்கிறார்களாம். 'மாவீரன்' படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளி வைப்பு. 'மாமன்னன்' படம் உதயநிதியின் கடைசி படம் என்று சொல்லப்பட்டுள்ளதால் அப்படத்தை வேறு எந்தப் படத்துடனும் போட்டியாக வெளியிட விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.