இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் ஜீவா, தமிழ் கலை டாட் காம் என்ற செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, கலைஞர்களுக்கு சாதி மதம் இல்லை. ஜிப்ஸி என்ற படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணித்தேன். அந்த சமயத்தில் அனைத்து நாட்டுபுற கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. என்றாலும் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று கூறினார் ஜீவா. மேலும் நான் நடித்த டிஷ்யூம் படத்தில் நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குகிற ஜாதி என்று ஒரு டயலாக் பேசி இருப்பேன்.
அதேபோல்தான் அனைத்து கலைஞர்களும் கைதட்டலுக்கு ஏங்குவார்கள் என்று பேசிய ஜீவா, அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது நம்முடைய தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கிறாரே அதே மாதிரி தான் இதுவும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் வளராமல் இருக்கிறோம் என்று கூறினார் நடிகர் ஜீவா.