புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கடந்த 2013ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன திரைப்படம் சூது கவ்வும். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் யங் மங் சங் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என கூறுகின்றனர். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 அன்று துவங்குகிறது.