இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவர இருக்கிறது. தற்போது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணா எழுதிய பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் பாடலாக “அ க ந க…” பாடல், இரண்டாம் பாடலான “வீரா ராஜ வீரா…” வெளியானது. தற்போது மூன்றாவது பாடலாக “சிவோகம்…” என்ற சிவபக்தி பாடல் வெளியாகி உள்ளது.
ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண ஷதகத்தில் இடம்பெற்ற சமஸ்கிருத பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். சத்யபிரகாஷ், நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிகரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், செண்பகராஜ், டி.எஸ்.அய்யப்பன் இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடல் நடிகர் ரகுமான் நடித்துள்ள மதுராந்தக சோழன் கேரக்டரின் பின்னணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வாரிசுரிமை அடிப்படையில் மதுராந்தகரே சோழ நாட்டின் மன்னராகி இருக்க வேண்டும். ஆனால் தாய் செம்பியன் மாதேவின் விருப்பப்படி பக்தி மார்க்கத்தில் பயணித்தார். சிவபக்கதாரான அவர் அகோரிகளுடன் சில காலம் வாழ்ந்தார். பின்னர் அகோரிகள் கூட்டத்துடன் சோழ ராஜ்யத்துக்கு வந்தார். இந்த நிகழ்வுகளின் பின்னணியாக இந்த பாடல் ஒலிக்கும் என்று பாடலோடு இணைத்து வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.