'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலூர் கோர்ட்டிலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தற்போது தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று புதிய வழக்கு தொடரப்பட்டு, அது நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவருக்கு முதுமை காரணமாக அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்பதால் கதிரேசன் மனைவி மீனாட்சி தனது கணவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துமனை டீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.