மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படம் கடந்த மாதம் வெளிவந்ததது. மதநல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் பேசிய இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி பதிவு செய்துள்ளேன். அந்த கதையை எனது அனுமதி இல்லாமல் 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. அதனால், இந்த படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி படத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன் படம் வெளியாகி அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.