படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
நடிகர் யோகிபாபுவை பொருத்தவரை தமிழில் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழிலேயே பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் யோகிபாபுவை இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கி வரும் ஜவான் படத்தின் மூலமாக பாலிவுட்டுக்கும் அழைத்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் யோகிபாபு.
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூலித்த படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படத்தை இயக்கிய விபின் தாஸ் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கவுள்ள குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் தான் தற்போது யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் கதை பிடித்துப்போனதால் நடிகர் பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தானே முன் வந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குனர் பசில் ஜோசப் தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.