தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் குழந்தை பிறப்பு பற்றி அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அது பற்றிய விசாரணை நடந்து எந்த விதி மீறலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பின் அந்த சர்ச்சை அடங்கியது.
தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் என்ன பெயர் வைத்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.