புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் பத்து தல. இந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என டிக்கெட் சரிபார்பவர் உள்ளே அனுமதிக்காமல் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
தொடர்ந்து அந்த ஊழியரை கண்டித்தும், ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தையும் கண்டித்தும் சமூகவலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் ஒரு விளக்கத்தையும் கொடுத்தது. இந்தப்படம் யு-ஏ சான்று படம். நரிக்குறவர்கள் சிறு குழந்தைகளை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றனர். அதேசமயம் பின்னர் அவர்கள் அனைவரையும் படம் பார்க்க வைத்ததாகவும் வீடியோவையும் வெளியிட்டனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மதுரையில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எந்த ஒரு மனிதனும் ஒடுக்கப்படுவதும் ஏற்று கொள்ள முடியாது. இந்த பூமி மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்கு படைக்கப்பட்டது. வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான்" என்றார்.