மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் சூப்பர்ஸ்டார் என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது. அந்தப் படம் ஓடி முடிந்த பின்னும் இன்னமும் அவ்வப்போது அது புகைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு '1947 ஆகஸ்ட் 16' பட டிரைலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் உங்களிடம் ரஜினி சாயல் தெரிகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன், “கிட்டத்தட்ட 1000, 2000 மேடைகளில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி பண்ணியிருப்பேன். அதை நான் நன்றாகப் பண்ணுவேன்னும் சொல்வாங்க. அது எப்பவுமே என் மேல இருந்துட்டேயிருக்கும். அது பிளான் பண்ணிலாம் பண்றதில்ல. அது எப்பவுமே என்கிட்ட உண்டு, அது எனக்கு சந்தோஷம்தான்,” என்றார்.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவது போலவே உள்ளது.