தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் சூப்பர்ஸ்டார் என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது. அந்தப் படம் ஓடி முடிந்த பின்னும் இன்னமும் அவ்வப்போது அது புகைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு '1947 ஆகஸ்ட் 16' பட டிரைலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் உங்களிடம் ரஜினி சாயல் தெரிகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன், “கிட்டத்தட்ட 1000, 2000 மேடைகளில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி பண்ணியிருப்பேன். அதை நான் நன்றாகப் பண்ணுவேன்னும் சொல்வாங்க. அது எப்பவுமே என் மேல இருந்துட்டேயிருக்கும். அது பிளான் பண்ணிலாம் பண்றதில்ல. அது எப்பவுமே என்கிட்ட உண்டு, அது எனக்கு சந்தோஷம்தான்,” என்றார்.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவது போலவே உள்ளது.