ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். இந்த படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ஆரா, குட்டி இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சாகுந்தலம் படத்தில் ஆராவுடன் நடித்த அனுபவம் குறித்து சமந்தா கூறுகையில், ‛‛அல்லு அர்ஜுனின் மகள் தனது திறமையால் படப்பிடிப்பில் உள்ள அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். அவர் புத்திகூர்மை மிக்கவர். அதோடு ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் மிகத் தெளிவாக பேசினார். அவருடன் நடித்த அனுபவம் மிக புதுமையாக இருந்தது. பல காட்சிகளில் தனது அசத்தலான நடிப்பால் என்னுடைய மனதை கொள்ளை அடித்துவிட்டார் ஆரா. இந்த ஆரா சூப்பர் ஸ்டாராவதற்காகவே பிறந்தவர். இவர் இந்த சாகுந்தலம் படத்தில் குட்டி இளவரசியாக நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.