மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார்.
அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மெல்ல குணமாகி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.