மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார்.
அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மெல்ல குணமாகி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.