புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஈஸ்வரியிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைகள் மீட்புஇந்த நிலையில் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுளனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. ஈஸ்வரியிடம் போலீஸ் நடத்தி வந்த விசாரணையில் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் உதவியோடு சிறிது சிறிதாக சுமார் 100 பவுன் வரை தங்க நகைகள் திருடி உள்ளார்கள். இது அல்லாமல் 30 கிராம் டைமண்ட், வீட்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.