லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஊட்டியைச் சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் பொம்மன், பெல்லி என்ற தம்பதியர் ஆதரவற்ற யானைககளை வளர்ப்பதைப் பற்றிய டாகுமென்டரியாக அப்படம் உருவானது.
ஆஸ்கர் விருது வென்ற பின் கார்த்திகி சென்னை வந்தார். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசை வழங்கினார் முதல்வர். மேலும் ஊக்கத்தொகையாக ஒரு கோடி ரூபாயையும் வழங்கினார்.
“ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டு சென்ற #TheElephantWhisperers இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் அவர்களை பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம் தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு,” என தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.