மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி மார்ச் 12ம் தேதி ஞாயிறு இரவு(இந்தியாவில் இன்று காலை) நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருதுகளில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்கள். 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழில் தயாரான டாகுமென்டரி குறும்படத்திற்கு சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் விருதை 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது.
விழா நடக்கும் போது மேடையில் அந்தந்த விருதுகளைப் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்படும். அப்படி சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது பற்றிய அறிவிப்பை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் வெளியிட்ட போது 'நாட்டு நாட்டு' பாடலைப் பற்றி பாலிவுட் படம் என்று குறிப்பிட்டார். அதை தெலுங்குப் படம் என்று குறிப்பிடாதது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படம் என்றால் அது ஹிந்திப் படங்களையே குறிக்கும். 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றிய அனைத்து பேட்டிகளிலும் அது தெலுங்குப் படம் என்றே மறக்காமல் குறிப்பிட்டு வந்தார் படத்தின் இயக்குனரான ராஜமவுலி. அப்படியிருக்கும் போது விழாக் குழுவினர் கவனக் குறைவாக படத்தை பாலிவுட் படம் எனக் குறிப்பிட்டதற்குப் பதிலளிக்க வேண்டும் என பல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.