இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி மார்ச் 12ம் தேதி ஞாயிறு இரவு(இந்தியாவில் இன்று காலை) நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருதுகளில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்கள். 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழில் தயாரான டாகுமென்டரி குறும்படத்திற்கு சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் விருதை 'ஆர்ஆர்ஆர்' தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் வென்றது.
விழா நடக்கும் போது மேடையில் அந்தந்த விருதுகளைப் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்படும். அப்படி சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது பற்றிய அறிவிப்பை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் வெளியிட்ட போது 'நாட்டு நாட்டு' பாடலைப் பற்றி பாலிவுட் படம் என்று குறிப்பிட்டார். அதை தெலுங்குப் படம் என்று குறிப்பிடாதது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படம் என்றால் அது ஹிந்திப் படங்களையே குறிக்கும். 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றிய அனைத்து பேட்டிகளிலும் அது தெலுங்குப் படம் என்றே மறக்காமல் குறிப்பிட்டு வந்தார் படத்தின் இயக்குனரான ராஜமவுலி. அப்படியிருக்கும் போது விழாக் குழுவினர் கவனக் குறைவாக படத்தை பாலிவுட் படம் எனக் குறிப்பிட்டதற்குப் பதிலளிக்க வேண்டும் என பல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.