திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்த நடிகை குஷ்பு, அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதோடு கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வாழ்த்துக்கு குஷ்பு பதிலளிக்கையில், தங்களின் ஆதரவு மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது. பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து நான் போராடுவேன். பெண்களுக்கு சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.