புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல ஆண்டுகள் தனக்கென தனி இடத்தைப் பிடித்து திரையுலகத்தில் மகாராணியாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஹோட்டல் அறையில் இருந்த பாத்ரூமில் இறந்து கிடந்தார். 54 வயதில் அவரது அகால மரணம் இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். இன்னும் அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அவரது அம்மாவின் நினைவு தினம் வருகிறது. ஆனால், இன்றே அவரது அம்மா பற்றிய நினைவுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“எல்லா இடங்களிலும் உன்னை நான் இன்னும் தேடுகிறேன் அம்மா. உன்னைப் பெருமைப்படுத்தும் விதமாக எல்லாவற்றையும் நான் இன்னும் செய்கிறேன் என நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் ஆரம்பித்து உன்னில்தான் முடிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.