மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் ‛கேடி' படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டே சில செல்பி படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “எனக்கு மூன்று பேக் ஐவி (IV) ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளேன். எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் மிக்க நன்றி. சரியான நேரத்தில் எனக்கு நல்ல மருத்துவ உதவி கிடைத்தது”என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த விதமான நோய் பாதிப்பு என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. எந்த காரணத்துக்காக இலியானாவுக்கு ஐவி ஊசி செலுத்தப்பட்டது என்று தெரியவில்லை.