கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
'நேரம், பிரேமம்' படம் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையில் முதல் முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன். அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளைக் கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். அவர் ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டுவிடுவேனோ என பயந்தேன். நம்பமுடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.