மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி படத்திற்கு பிறகு முழுமையான நாயகியாக நடிக்கும் படம் இது.
இதற்கிடையில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து வந்தார். இதில் பெரிய கேரக்டரில் நடிக்கிறார் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் சமந்தாவின் அதாவது கதைப்படி சகுந்தலையின் தோழிகளில் ஒருத்தியாக அவர் நடித்திருப்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வேளை அவருக்கு கதையில் வேறு முக்கியத்தும் எதுவும் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரிய வரும்.