மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு கதையை அவரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி ஒரு ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அகிலன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை இயக்கிவிட்டு அடுத்து ஜெயம் ரவியை லோகேஷ் இயக்க உள்ளாரா அல்லது விஜய்யின் 67வது படத்திலேயே அவரை நடிக்க வைக்க பேசி உள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.