வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் கதை, திரைக்கதை எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. மேலும் திரைப்படம் தொடர்பான நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். தற்போது ஆனந்த் அண்ணாமலை காகங்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆகியிருக்கிறார்.
இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், படம் உருவாகிறது.
படம் பற்றி ஆனந்த் அண்ணாமலை கூறியதாவது: நான் எனது நண்பர்களுடன் இணைந்து மாயவரம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறோம். வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர். ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் மர்மமான முறையில் எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி, ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.