மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். தற்போது பெயிலில் ரிலீஸாகியுள்ள அர்னவ், செல்லம்மா தொடரிலேயே ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'செல்லம்மா' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்க எப்போ செல்லம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?. அந்த மேகாவ துரத்திவிட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லாருக்கும்' என்று கூறுகின்றனர்.
அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்னவின் நிஜவாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி 'இவனே பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்' என அர்னவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.