இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக என்ட்ரி ஆகி உள்ள படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வருகிற 9ம் தேதி படம் வெளிவருவதை தொடர்ந்து படக்குழுவினருடன் இணைந்து வடிவேலு புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில் வடிவேலு கூறியிருப்பதாவது: என்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப்பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலு ரொம்ப திமிரு பிடித்தவன், என்ன ஆட்டம் போடுகிறான் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள்.
என்னோட படத்தை, காமெடியை மக்கள் ரசிக்கனும், அதற்காக நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு. என்று கூறியுள்ளார்.