கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' தெலுங்குப் படம், பான் இந்தியா படமாக கடந்த வருடக் கடைசியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தை ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியிட உள்ளார்கள். படத்திற்கான பிரிமீயர் காட்சிகள், டிசம்பர் 1ம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் நடைபெற உள்ளது. அதில் படக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ரஷ்யாவில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய மொழித் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு மொழிப் படங்கள் உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளன. 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான படங்கள் தெலுங்கில் தயாராகி வருகின்றன.