தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அந்தஸ்தைப் பெற்றார். தற்போது 'ஆதி புருஷ், புராஜக்ட் கே, பெயரிடப்படாத ஒரு படம்' என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். அவரும், பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'ஆதி புருஷ்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்து வருகிறார்.
வருண் தவான், கிர்த்தி சனோன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'பேடியா' படத்தின் பிரமோஷனுக்காக கரண் ஜோஹரின் 'ஜலக் திக்லா ஜா' நிகழ்ச்சியில் வருண் மற்றும் கிர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வருணிடம் “பாலிவுட்டில் சிங்கிள் ஆக இருக்கும் நடிகைகள் யார் யார் ?,” என கரண் ஜோஹர் கேட்டார். அவர் சொன்ன பட்டியலில் கிர்த்தி சனோன் இடம் பெறவில்லை. ஏன் அவர் பெயரைச் சொல்லவில்லை என கரண் வருணிடம் கேட்டதற்கு, “கிர்த்தியின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை, ஏனென்றால் அவர் வேறொருவரின் இதயத்தில் இருக்கிறார். அவந்த மனிதர் தற்போது மும்பையில் இல்லை, தீபிகா படுகோனேவுடன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்,” என்று பதிலளித்தார். பிரபாஸ் தற்போது தீபிகாவுடன் புராஜக்ட் கே' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதன் மூலம் பிரபாஸ், கிர்த்தி சனோனன் இருவரும் காதலில் இருப்பதை சக நடிகரான வருண் தவான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்களும் கருதுகிறார்கள்.