பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி அவரது படங்களுக்கு என ரசிகர்களே அங்கே உருவாகி விட்டார்கள். பிரபாஸும் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து மூன்றே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் புதிய இணைப்பு படம் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் ஜப்பானில் இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக நேரிலேயே ஜப்பான் சென்று அங்குள்ள ரசிகர்களுடன் இதன் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் பிரபாஸ். அங்கு அவர் பேசும்போது, “ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே பலர் என்னிடம் சொன்னார்கள். அதை நேரில் பார்க்கும் கனவு இன்று எனக்கு நனவாகியுள்ளது. நானும் இனி வருடம் தோறும் ஜப்பானுக்கு வந்து உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.