ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்தனர். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனாலும், தமிழிலும் தடம் பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு', தனுஷ் நடிக்கும் 'வாத்தி' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்கள்தான். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகும் 'ஆர்சி 15', வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் 'கஸ்டடி' ஆகிய படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியான 'லவ் டுடே' படத்திற்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து படம் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம்.