ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக அவர் இயக்கியுள்ள படத்தில் தானே கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். கதாநாயகியாக இவானா என்பவர் நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக சத்யராஜின் மகளை காதலித்து அவரிடம் திருமணத்திற்கு நாயகன் பிரதீப் சம்மதம் கேட்பதாகவும் இருவருடைய மொபைல் போன்களையும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு ஆளுக்கு ஒரு நாள் வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் பின்பு அவர்களுக்குள் காதல் இருந்தால் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றும் ஒரு புதிய யுத்தியை சத்யராஜ் மேற்கொள்வதாகவும் அதன்பிறகு இருவருக்கும் ஏற்படும் பிரச்சினைகள்தான் படம் என்பதும் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.
இளைஞர்களை கவரும் அம்சமாக நிறைய வசனங்களும் காட்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தாலும் டிரைலரின் இறுதிக்காட்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசும் ஒரு வார்த்தை மியூட் செய்யப்பட்டு உள்ளது. மியூட் செய்து விட்டால் மட்டும் ரசிகர்களுக்கு அது தெரியாது என நினைத்து வேண்டுமென்றே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது போல அந்த வார்த்தையை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வலிந்து திணித்து மியூட்டும் செய்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு சோசியல் மீடியாவில் பலர் கண்டனம் தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.