பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்கிற திரைப்படம் வெளியானது. இதற்குமுன் கோமாளி என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களமிறங்கினார். அதற்கு கைமேல் பலனாக, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக இன்றைய காதலர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இந்தப்படத்தைப் ரசித்துப் பார்க்கும் விதமாக கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த படத்திற்கு இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல்காட்சியை ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் அங்கே நின்ற மீடியாக்களிடம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும் டைரக்சனையும், காதலர்கள் தங்களுடைய செல்போன்களை ஒருநாள் மற்றும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் புதிய கான்செப்ட்டையும் உரத்த குரலில் சிலாகித்து பாராட்டி கொண்டிருந்தார்.
அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கினார் அந்த ரசிகர். ஆந்திராவில் நமக்கு இப்படி ஒரு வரவேற்பா என பிரதீப் ரங்கநாதன் ஆச்சரியப்பட்டு போனார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




