சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த ‛இரவின் நிழல்' படம் திரைக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில் அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இருந்தபடி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் போலவே கடந்து செல்லும் அந்த கரும் படகு. இன்று கொச்சி , நாளை கோவை, நாளை மறுதினம் காங்கேயம் ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்'' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
தான் விரைவில் அடுத்த படத்தை அறிவிக்கப்போவதை இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.