டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த ‛இரவின் நிழல்' படம் திரைக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில் அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இருந்தபடி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் போலவே கடந்து செல்லும் அந்த கரும் படகு. இன்று கொச்சி , நாளை கோவை, நாளை மறுதினம் காங்கேயம் ஊர் ஊராய் ஊர்ந்து செல்கிறேன். ஊற்றெடுக்கும் கற்பனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் ஒரு படைப்பு விரைவில்'' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
தான் விரைவில் அடுத்த படத்தை அறிவிக்கப்போவதை இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.




