காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் நடித்த புதுமுக நடிகரும், தொழிலதிபருமான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது. தற்போது கணவருடன் இணைந்து படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கணவருடன் திருப்பதிக்கு சென்ற நமீதா அங்கு சாமி தரிசனம் செய்தார். கடந்த முறை திருப்பதி வந்தபோது அங்கு ஏற்பாடுகள் சரியில்லை என்று நமீதா குற்றம் சாட்டியிருந்தார். அதனால் இந்த முறை தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று சாமி தரிசனம் செய்ய வைத்து, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக போய்கொண்டிருக்கிறது. எனது குழந்தைகள் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன். தற்போது படங்களில் நடிப்பதை விட அரசியலிலேயே அதிக ஆர்வம் உள்ளது. விரைவில் தீவிர அரசியலில் குதிக்க இருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்” என்றார்.
நமீதா கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ததது குறிப்பிடத்தக்கது.