இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் 4ம் தேதி கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் 255 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பல திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அந்த விழாவில் விடுபட்ட 41 கலைஞர்களுக்கு நேற்று தலைமை செயலகத்தில் விருது வழங்கப்பட்டது, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார்.
இயக்குனார்கள் வெற்றி மாறன், சேரன், நடிகர்கள் கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், பாடகி சின்மயி, பாடலாசிரியர் யுகபாரதி, நடிகை ஆனந்தி, குயிலி உள்பட41 பேர் பெற்றுக் கொண்டனர். சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான், சூரி ஆகியோர் சார்பில் மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர். சாதனை கலைஞர்கள் பாலுமகேந்திரா, பாலமுரளி கிருஷ்ணா, பிறைசூடன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.