புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
படக் குழுவுக்கும் தனுஷுக்கும் இடையில் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 19ம் தேதி வெளியான போதே, அந்த போஸ்டரை தனுஷ் கண்டு கொள்ளவில்லை. அதை ரிடுவீட்டும் செய்யவில்லை.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று படத்தின் புதிய போஸ்டரை தீபாவளி வாழ்த்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த போஸ்டரில் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடாமல் இருந்தனர். ஆனால், மதியத்திற்கு மேல் அதன் தயாரிப்பாளர் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய அதே போஸ்டரை மீண்டும் வெளியிட்டார்.
தனுஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'வாத்தி' தான். ஆனால், இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தனுஷ் கண்டு கொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குனரோ எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.