துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கார்த்தி, ராஷி கண்ணா நடித்த சர்தார் படம் கடந்த 21ம் தேதி வெளியானது. ஓரளவிற்கு நல்ல வரவேற்புடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நல்ல வசூலை கொடுத்து வருதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது. இதில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதை இயக்குனர் பி.எஸ்.மித்ரனும், கார்த்தியும் இணைந்து அறிவித்தனர். இது தொடர்பான டீசரும் வெளியிடப்பட்டது.
சர்தார் படத்தின் இறுதியில் உளவாளி சர்தார் மறைந்து விடுவார். அவரது மகன் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் புதிய உளவாளியாக நியமிக்கப்படுவார். அவரின் முதல் மிஷன் கம்போடியாவில் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும். இதன் படப்பிடிப்புகள் உடனே தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் மித்ரன் தெரிவித்தார். இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதி கம்போடியாவில் நடக்கும் என்று தெரிகிறது. முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.