இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நிகழ்வு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் உட்பட பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இவர்கள் அதை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மருத்துவக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும், டிசம்பரிலேயே குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைகள் எல்லாம் ஒருபுறம் சென்று கொண்டிருக்க குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த தம்பதியர். அதிலும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் தனது மகன் தன் மீது சிறுநீர் கழித்துள்ள அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர், தனது கனவு நனவாகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.