மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த நிகழ்வு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் உட்பட பல்வேறு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இவர்கள் அதை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மருத்துவக்குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுஒருபுறம் இருக்க இந்த தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததாகவும், டிசம்பரிலேயே குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைகள் எல்லாம் ஒருபுறம் சென்று கொண்டிருக்க குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த தம்பதியர். அதிலும் விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் தனது மகன் தன் மீது சிறுநீர் கழித்துள்ள அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர், தனது கனவு நனவாகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.