ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛பொன்னியின் செல்வன்' படத்தில் அவர் ஏற்று நடித்த குந்தவை வேடம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது. தமிழ் சினிமாவில் இப்போதும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதை நெருங்கி விட்டார். ஆனால் திருமணம் செய்யவில்லை.
இதுபற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ஏதோ கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விரும்பவில்லை. மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்து வாழ எனக்கு விருப்பம் இல்லை. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நான் நபரை சந்திக்க வேண்டும். அப்படி ஒருவரை சந்தித்தால் திருமணம் செய்வேன்'' என்கிறார் திரிஷா.
சில ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் வருண் மணியன் உடதன் திரிஷாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் திருமணம் செய்யும் முன்பே இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் படங்களில் மட்டுமே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.