நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குனர் மணிரத்தினத்தின் மிகப்பெரிய முயற்சியால் தற்போது திரைப்படமாக வடிவெடுத்து, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. எதிர்பார்த்தபடி இந்த படத்திற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பிருந்தே படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.
அதேசமயம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் எடிட்டிங் டேபிளில் அதன் ஒன்லைன் ஆர்டர் வரிசையை அப்படியே கலைத்துப்போட்டு புது வடிவம் கொடுத்தார் என்று இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில புதிய தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது மற்ற படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போலவே படத்தில் உள்ள கதாநாயகர்கள், கதாநாயகிகளை வரிசையாக அறிமுகப்படுத்தும் விதமாக தான் முதலில் அவர் ஒன்லைன் ஆர்டர் எழுதி இருந்தாராம். ஆனால் அதன்பிறகு கதை துவங்கும்போதே, ஒரு கதைசொல்லியின் உதவியுடன் படத்தை துவங்க வேண்டி இருந்ததால், ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை மட்டும் முதலில் அறிமுகப்படுத்தி ஆன்லைன் ஆர்டரில் காட்சிகளின் வரிசையை மாற்றினாராம் மணிரத்னம்.
அதுமட்டுமல்ல குந்தவை கதாபாத்திரத்திற்கு என தனி அறிமுக காட்சி வைக்காமல், வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவரை சந்திக்கும்போது நேரடியாக அவரை அறிமுகப்படுத்துவதாகவும் மணிரத்னம் மாற்றினாராம். மேலும் இந்த கதைக்கு இடைவேளை விடுவதற்கு என எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் இல்லாததால் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இடைவேளை விடும் முடிவையும் எடிட்டிங்கின்போது தான் மணிரத்னம் எடுத்தார் என்றும் கூறியுள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.