'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் அயல்நாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. இந்த படம் சினிமா பிலிமில் மோகம் கொண்டு அதன் கனவில் மிதக்கும் ஒரு சிறுவனை பற்றிய கதை. இதில் நடித்த சிறுவர்களில் ராகுல் கோலியும் ஒருவர்.
நாளை மறுநாள் (14ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த 15 வயது ராகுல் கோலி புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ராகுலின் மரணம் குறித்து அவனது தந்தை கூறியிருப்பதாவது:
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த செல்லோ ஷோ படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்.
ராகுலை காப்பாற்ற செல்லோ படக்குழுனர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பண உதவியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து வந்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.