ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் அறிமுகமான 'குட் பை' படம் கடந்த வாரம் வெளிவந்தது. அப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் முடிந்ததும் ஓய்வெக்க மும்பையிலிருந்தே நேரடியாக மாலத் தீவு சென்றார். அவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சென்றுள்ளதாக அன்றைய விமான நிலைய புகைப்படங்களைப் பகிர்ந்து செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவரும் தற்போது அங்கு ஒன்றாகத்தான் தங்கியுள்ளார்களா என்பது குறித்த தகவல் இல்லை.
தங்களுக்குள் காதல் இல்லை என இருவரும் மறுத்த நிலையில் ஒன்றாக ஓய்வெடுக்க மாலத்தீவிற்குச் சென்றது பாலிவுட், டோலிவுட்டில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் விஜய் ஹிந்தியில் அறிமுகமான 'லைகர்' படுதோல்விப் படமாகவும், ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமான 'குட் பை' படம் தோல்விப் படமாகவும்தான் அமைந்துள்ளது. இருப்பினும் இருவரும் மீடியாக்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான நட்சத்திரங்களாக உள்ளனர்.
ராஷ்மிகா மாலத் தீவில் அவர் தங்கியுள்ள ரிசார்ட்டிலிருந்து புகைப்படங்களைப் பதிவிட ஆரம்பித்துவிட்டார். மாலத் தீவு சென்றாலே இப்படி இன்ஸ்டாகிராம்ல் புகைப்படங்களைப் பதிவிடுது வழக்கம். அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களுக்கும் 30 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் பதிவிட்டால் அது ஒரு கோடி லைக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.