இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் வெளியான காட்பாதர் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. இதனால் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜாவுக்கு மவுசு அதிகரித்து இருப்பதுடன். ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தையும் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம்சரண் நடிக்க துருவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். தமிழ் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் டீசன்டான வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவா இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காட்பாதர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான என்.வி.பிரசாத் இந்த இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.