இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடிப்பில் வெளியான காட்பாதர் திரைப்படம் வெற்றியை பெற்றுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற பெயரில் வெளியான இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. இதனால் தெலுங்கு திரையுலகில் மோகன்ராஜாவுக்கு மவுசு அதிகரித்து இருப்பதுடன். ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தையும் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம்சரண் நடிக்க துருவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். தமிழ் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் டீசன்டான வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவா இரண்டாம் பாகத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காட்பாதர் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான என்.வி.பிரசாத் இந்த இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.