தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தெலுங்கில் கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாகி உள்ளார். தற்போது அமிதாப்பச்சனுடன் 'குட் டே', ரன்பீர் கபூருடன் ‛அனிமல்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ‛புஷ்பா -2' படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமான 'கீதாகோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் ‛டியர் காம்ரேட்' படத்தில் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. அப்போது இருந்து இருவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்த கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தபோது ‛இது ஒரு கியூட் வதந்தி' என்று கூறியுள்ளார்.