வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‛‛சாதி, மதம், பேதம் பார்க்காமல் தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சரியாக இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா. ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி அல்ல'' என்றார்.